Showing posts with label புதிர். Show all posts
Showing posts with label புதிர். Show all posts

Tuesday, May 24, 2011

புதிர்-5 : தண்ணீர் தொட்டி

எங்கள்  வீட்டில் ஒரு தண்ணீர் தொட்டி இருக்கிறது. அதில் பொருத்தியுள்ள குழாய் கொஞ்சம் விசித்திரமானது. மோட்டரை போட்டவுடன் முதல் நிமிடம் கொஞ்சம் தண்ணீர் வரும். இரண்டாவது நிமிடம் அதைப்போல இரண்டு மடங்கு தண்ணீர் வரும். மூன்றாவது நிமிடம் நான்கு மடங்கு தண்ணீர் வரும்.
நான்காவது நிமிடம் எட்டு மடங்கு தண்ணீர் வரும். இப்படி நிமிடத்துக்கு நிமிடம் தண்ணீரின் அளவு இரட்டித்து கொண்டே போகும். தொட்டி முழுவதும் தண்ணீர் நிரம்ப ஒரு மணி நேரம் ஆகும். அப்படியானால் பாதித்தொட்டி எப்போது நிரம்பும்?.

Thursday, April 7, 2011

புதிர் 4 - முக்கோணங்களின் எண்ணிக்கை



பகுதி எண் வெள்ளை முக்கோணங்கள் கருப்பு முக்கோணங்கள்
1 1 3
2 3 6
3 6 10
4 ____ 15
5 15 ____
1. பகுதி நான்கு மற்றும் ஐந்தினை நிரப்புங்கள்.

2. பகுதி ஐம்பதில் எத்தனை வெள்ளை முக்கோணங்கள் இருக்கும்?

புதிர் 3 - எவ்வளவு பணம் இழப்பு?


    சைக்கிள் கடை வைத்திருக்கும் என்னுடைய நண்பர் முத்துவின் கடைக்கு ஒருநாள் ஒரு வெளிநாட்டு பயணி சைக்கிள் வாங்க வந்தார். முத்து அவரிடம் சைக்கிளை ரூபாய் 350க்கு விற்பனை செய்தார். ஆனால், முத்து அந்த சைக்கிளை வாங்கிய விலை ரூபாய் 300 . அந்த வெளிநாட்டு பயணி, அவரிடம் பணம் இல்லை எனவும், ஆனால் அவரிடம் Travelers Cheque இருப்பதாகவும் கூறி, நூறு ரூபாய் மதிப்புள்ள நான்கு செக்குகளை முத்துவிடம் கொடுத்திருக்கிறார். முத்துவுக்கு வங்கியில் கணக்கு இல்லை. அதனால் அவர் அந்த செக்குகளை அவருடைய பக்கத்து கடைக்காரரிடம் கொடுத்து, அவரிடம் இருந்து 400 ரூபாய் பணம் பெற்று, அதிலிருந்து 50 ரூபாயை அந்த பயணியிடம் கொடுத்து சைக்கிளையும் கொடுத்திருக்கிறார். முத்துவுக்கு 50 ரூபாய் லாபம் வந்ததில் மகிழ்ச்சி.

    மறுநாள் முத்துவின் பக்கத்து கடைக்காரர், தான் வங்கியில் அந்த செக்குகளை டெபொசிட் செய்ததாகவும் ஆனால் அந்த செக்குகள் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறி, முத்துவிடம் அந்த செக்குகளை கொடுத்துவிட்டு அவர் கொடுத்த ரூபாய் 400ம் திரும்ப வாங்கிகொண்டு போய்விட்டார். முத்து எவ்வளவு தேடியும் அந்த பயணி கிடைக்கவில்லை. இந்த குளறுபடியால் முத்துவுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு?


குறிப்பு:-

இந்த பதிவை யாரவது காப்பி பேஸ்ட் பண்ணினாலும் தயவு செய்து எனது இந்த பதிவிற்கு லிங்க் கொடுக்கவும் .

Wednesday, April 6, 2011

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?


செந்திலும் அகிலனும் நண்பர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

அகிலன் : வணக்கம் செந்தில் எப்படி இருக்கீங்க?

செந்தில் : எனக்கென்ன நான் நல்லா இருக்கேன், கல்யாணம் ஆகி மூணு குழந்தைங்க இருக்காங்க.

அகிலன் : அப்படியா நல்லது. குழந்தைங்களுக்கு என்ன வயசு ஆகுது?

செந்தில் : அவங்க மூனுபேரோட வயச பெருக்கினால் 72 வரும். அவங்க மூனுபேரோட வயச கூட்டினால் உன் பிறந்ததேதி வரும்.

அகிலன் : அப்படியா, என்னால் இன்னும் கண்டுபிடிக்கமுடியல.

செந்தில் : என்னோட பெரிய குழந்தை இப்போதான் பியானோ கத்துக்க போறான்.

அகிலன் : அப்படியா. இப்ப எனக்கு அவங்க வயசு தெரிஞ்சிடுச்சி.


குழந்தைகளின் வயது என்ன? அகிலன் எப்படி கண்டுபிடித்தார்?


Friday, April 1, 2011

புதிர்

ஒரு சதுர வடிவ குளம். அதன் நடுவில் ஒரு கோவில். குளத்தின் எந்த பக்கத்திலிருந்தும் அந்த கோவில் இருக்கும் தொலைவு 10 மீட்டர். (பார்க்க படம்.)



உங்களிடம் 9 மீட்டர் நீளமுள்ள இரண்டு இரும்பு பலகைகள் இருக்கின்றன. அதன் மேல் ஒருவர் நடந்து செல்ல முடியும். நீங்கள் குளத்தில் இறங்காமல் இந்த இரண்டு பலகைகளின் உதவியுடன் அந்த கோவிலை அடைய வேண்டும். எக்காரனத்தைக்கொண்டும் குளத்தினுள் இறங்கக்கூடாது. 


[Edit]
இந்த புதிருக்கான விடை இந்த பதிவில்.