Thursday, April 7, 2011

புதிர் 3 - எவ்வளவு பணம் இழப்பு?


    சைக்கிள் கடை வைத்திருக்கும் என்னுடைய நண்பர் முத்துவின் கடைக்கு ஒருநாள் ஒரு வெளிநாட்டு பயணி சைக்கிள் வாங்க வந்தார். முத்து அவரிடம் சைக்கிளை ரூபாய் 350க்கு விற்பனை செய்தார். ஆனால், முத்து அந்த சைக்கிளை வாங்கிய விலை ரூபாய் 300 . அந்த வெளிநாட்டு பயணி, அவரிடம் பணம் இல்லை எனவும், ஆனால் அவரிடம் Travelers Cheque இருப்பதாகவும் கூறி, நூறு ரூபாய் மதிப்புள்ள நான்கு செக்குகளை முத்துவிடம் கொடுத்திருக்கிறார். முத்துவுக்கு வங்கியில் கணக்கு இல்லை. அதனால் அவர் அந்த செக்குகளை அவருடைய பக்கத்து கடைக்காரரிடம் கொடுத்து, அவரிடம் இருந்து 400 ரூபாய் பணம் பெற்று, அதிலிருந்து 50 ரூபாயை அந்த பயணியிடம் கொடுத்து சைக்கிளையும் கொடுத்திருக்கிறார். முத்துவுக்கு 50 ரூபாய் லாபம் வந்ததில் மகிழ்ச்சி.

    மறுநாள் முத்துவின் பக்கத்து கடைக்காரர், தான் வங்கியில் அந்த செக்குகளை டெபொசிட் செய்ததாகவும் ஆனால் அந்த செக்குகள் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறி, முத்துவிடம் அந்த செக்குகளை கொடுத்துவிட்டு அவர் கொடுத்த ரூபாய் 400ம் திரும்ப வாங்கிகொண்டு போய்விட்டார். முத்து எவ்வளவு தேடியும் அந்த பயணி கிடைக்கவில்லை. இந்த குளறுபடியால் முத்துவுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு?


குறிப்பு:-

இந்த பதிவை யாரவது காப்பி பேஸ்ட் பண்ணினாலும் தயவு செய்து எனது இந்த பதிவிற்கு லிங்க் கொடுக்கவும் .

16 comments:

  1. vidai therinthavargal yaravathu undu
    apdi entral antha patiyalil ennaiyum serkkalaam

    ReplyDelete
  2. செங்கணக்கு பிரகாரம் அவருக்கு நட்டம் 350 ரூபாய். சைக்கிள் விலை 300 + வெளிநாட்டுக்காரருக்கு கொடுத்தது 50.

    ReplyDelete
  3. @DrPKandaswamyPhD 350 என்பது, தவறு. இன்னொரு முறை சிந்தித்து பாருங்கள் புரியும்.

    ReplyDelete
  4. @sathish 700 என்பதும் தவறு...

    ReplyDelete
  5. 400 = 50(பக்கத்து கடைகாரருக்கு) + 50(வெளிநாட்டுக்காரருக்கு) + 300 (சைக்கிள்)

    ReplyDelete
  6. @செந்தில் எப்படி 150?

    ReplyDelete
  7. No. The answer is 750
    300(cycle cost) + 400(pakkatthu kadaikararukku koduthathu) + 50(payanikku koduththathu)

    ReplyDelete
  8. 400 dhan sari...

    300 cycle cost
    + 50 payanikku kuduthadhu..+ 50 pakkathu kadaikkararukku kuduthadhu..

    neengal solvadhu pol
    //300(cycle cost) + 400(pakkatthu kadaikararukku koduthathu) + 50(payanikku koduththathu)//

    //400(pakkatthu kadaikararukku koduthathu)// loss illai. en endral pakkathu kadaikkararidam irundhu avar mudhalnal 400 vaangi irukkiraar...adhil 50 poga 350 avar kaiyil irundhirukkum..so adhil 50 mattume loss

    ReplyDelete
  9. @Anonymous நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.. உங்கள் விடைதான் இதுவரை சரியான விடை...

    ReplyDelete
  10. @Anonymous நீங்கள் உங்கள் பதிலில் இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்... முதல் நாள் முத்துவுக்கு ரூபாய் லாபம் வந்தது, அதனை அவருடைய இழப்பிலிருந்து கழிக்க வேண்டும்...

    ReplyDelete
  11. அப்படி பார்த்தால் @DrPKandaswamyPhD அவர்களின் செங்கணக்கு சரியான பதில்...

    ReplyDelete