Tuesday, April 5, 2011

வைகோவை காப்பாற்றுங்கள்!

என்னுடைய பருவ வயது காலம் முதல் பார்த்த கட்சிகளில் படித்தவர்கள்(சட்டம்) நிறைந்த கட்சி ம.தி.மு.க. ஒன்றே. இந்த ஒரு அபிப்ராயம் மட்டும்தான் இந்த கட்சி மீது எனக்கு உண்டு. ஒரு சாதாரண குடிமகனை போன்றே எனக்கும் வக்கீல்களை பிடிக்காது. DMK - ADMK கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பிறகு, வைகோ மீது எனக்கு எந்த வித தனிப்பட்ட பெரிய தாக்கம் என்று சொல்லும் அளவுக்கு  எதுவும் இல்லை.

நேற்று நான் படித்த செய்தி : தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் ஆதரவலை என்று
 கூறுமளவுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு எதுவும் இல்லை.

இரவில் நான்கண்ட கனவு :  நானும் வைகோவும் கட்சி அலுவகத்தில் அமர்ந்து இருக்கிறோம். வைகோ சிறிது பதட்டமாகவே தோன்றினார். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டு இருந்தார். ஒருமுடிவுக்கு வந்தவராக தொலைபேசியை எடுத்து காவல்துறைக்கு போன் செய்து "இன்னும்  சில மாதங்களுக்கு எங்கள் கட்சியில் எந்த கூட்டமும் நடக்காது ஆனாலும் எங்களுக்கு சிறிது காலம் நீங்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை வரும், அதை உங்கள் கடமையாக நீங்கள் செய்தால் அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்" என்றார்.

அண்ணா,என்ன காரணத்திற்காக இப்படி கூறினீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா? என்றேன். "அந்த அம்மா கோபத்தில் நிதானமாக யோசிக்க தெரியாதவள், கள்ளத்தனமும் உண்டு,தான்தான் என்ற அகங்காரமும் உண்டு.ஆனால் குரோதம் படைத்த நெஞ்சம் கொண்டவள் அல்ல. ஆனால் இந்த மனிதன் எதையும் எப்படியும் எந்த வழியிலும்  அடைய வேண்டும் என்று நினைக்ககூடிய  மனம் படைத்தவன். சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் அல்ல, தான் செய்ததுதான் சரி என்னும் தர்க்கம் செய்யக்கூடியவன். இவர்கள் ஆட்டத்தில் நான் பகடையாக பலநேரங்களில் மாட்டிக்கொண்டேன், இந்த முறை அது நடக்காமல் செய்துவிட்டேன். இருந்தாலும் இவர்களிடம்  சிறிது எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன்" என்றார். அதனால்தான் பாதுகாப்புக்காக நான் பட்டாக்கத்தியை என்பின்னால் ஒளித்துவைத்து இருந்தேன், இது அவர்க்கு தெரியாது. அவராக சுவர்பக்கமாக திரும்பி ஏதோ யோசித்து கொண்டும் சுவர்மீது உள்ள கரும்பலகையில் எழுதிக்கொண்டும் இருந்தார்.  நான் அறையின் இந்த மூலையில் வாசல்வாயில் அருகில் ஒரு செய்தித்தாளை படித்தும் பார்த்தும் கொண்டிருந்தேன்.

திடீரென்று படத்தில் வரும் வில்லன் போல மூன்று பேர் தடியாக முகத்தை மறைத்துக்கொண்டு நான் வைத்திருந்ததை விட இருமடங்கு பெரியதாக பட்டாக்கத்தியை என் முன்னே காட்டினார்கள் . நான் நா தழுத்து
எழுந்த பொழுது என் பின்னால் கத்தி கீழே சரிந்து விழுந்துவிட்டது. என்னால் அவர்களை சமாளிக்கமுடியாது அதனால் சமாளிப்பது முக்கியமல்ல சாமர்த்தியம் தான் முக்கியம் என்று எண்ணியவனாக அமைதி காத்தேன்.

அந்த நொடியில் ஒருவன் என் வாயைப்பொத்தி
வெளியில் தள்ளினான். தள்ளாடிக்கொண்டே  அண்ணே,உங்களை குத்த
 வருகிறார்கள் என்று கத்தி விட்டு ஓடினேன். ஓடிக்கொண்டே  ஜன்னல் 
வழியாக பார்த்தேன்,நான் கத்துவற்குள் அவர்கள் குத்திவிட்டார்கள், வேகமாக வெளியே  ஓடிவந்து அண்ணனை குத்திவிட்டார்கள் காப்பாற்றுங்கள் எனக்கத்தினேன், அவர்கள்என் அருகே வந்தார்கள்."இந்தா உன்னுடைய கத்தி எடுத்துகொண்டு ஓடிவிடு உன்னை விட்டு விடுகிறோம்,யாரிடமாவது சொன்னால் உன்கதி அவ்ளோதான் என்றார்கள்.

அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் விலகியதும் என் சித்திப்பையன் செய்திஆசிரியராக இருக்கிறான்.அவனுக்கு போன் செய்து "இந்தமாதிரி
நடந்து விட்டது உடனே வா" என்று அழைத்தேன். அவன் வரும்பொழுது
காவல்துறையும் வந்துவிட்டது.அவர்களிடம் நடந்ததை கூறிவிட்டு முழு
ஒத்துழைப்பும் அளிப்பதாக உறுதியளித்தேன். வைகோவை தீவிர
சிகிச்சைப்பிரிவில் சேர்த்தார்கள். 

இந்த நேரத்தில் கருணாநிதி " கூட்டணிக்கு ஆதரவு தராததால் ஒரு கோமகனை தமிழகத்தின் தன்னார்வ தொண்டனை, தள்ளி இருந்த போதும் என் தம்பியாகவே இருந்த தமயனை, தமிழகத்தின் போர்வாளை கொல்லத்துணிந்த, பதிவிரதம் தெரியாத, பத்தினியின் அர்த்தம் புரியாத, பெண்ணுருவம் கொண்ட ராஜபக்சேவுக்கா உங்கள் ஒட்டு, உங்கள் ஓட்டை ஓட்டையாக்கி விடாதீர்கள். நான் சிந்தும் இந்த கண்ணீற்கு விலையாக இல்லை என்றாலும் என் தம்பி சிந்திய ரத்தத்திற்காகவாது உங்கள் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்."

 அதே நேரத்தில் ஜெயலலிதா " வைகோ மீது நான் வைத்து இருக்கும் மரியாதை எல்லோருக்கும் தெரியும்.  அவரை குத்தி விட்டு பலியை
என்மீது போட்டு ஒட்டு சேகரிக்க பார்க்கிறார் கருநாக்கு படைத்த கருணாநிதி.
புலிகளை வைத்து என்ன கொள்ளப்பார்க்கிறான் என்று காரணம் காட்டி
கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு இன்று என் தம்பி என்று நாடகம் 
ஆடுகிறாயே வெட்கமாக இல்லையா உனக்கு. அன்று காங்கிரஸ் கட்சிக்காக 
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தாய். இன்று உன் கட்சி
மற்றும் உன் பதவி சுகத்துக்காக ஒருதமிழ் தலைவனை குத்திவிட்டாயே" என்றார்.  

இப்பொழுதும் வைகோவை பகடையாகவே  உபயோகப்படுத்துகிறார்கள்.
 பிறகு விடியற்காலை உதயத்தில் கனவு கலைந்து நான் விழித்துக்கொண்டேன். எதுவும் உண்மை இல்லை என்பதில் எனக்கு
சந்தோசமே, இவை நடக்காமல் இருக்கவும் நடக்க இருந்தால் தடுக்கவுமே
மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

காவல்துறை நண்பர்களே உங்கள்மீது நம்பிக்கை வைத்த வைகோவை
பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது என் கனவு, மற்றவர்கள் கவனத்திற்காக.

2 comments:

  1. Ungalikku vera nalla kanaveee varathaaa? Konjam kilukuluppa kanavu vara en prarthanikal.

    ReplyDelete
  2. therthal neraththulayum ungalukku kilukiluppu kekkuthu,,,,,jeylalitha padatha pottu paarunga

    ReplyDelete