Monday, December 12, 2011

இப்படி ஒரு மத்திய அரசு தேவையா?


    முல்லை பெரியாறு பிரச்சனை தமிழகத்திலும் கேரளத்திலும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது, ஆனால் இப்பிரச்சனையில் தலையிட்டு நடுநிலை செய்துவைக்கவேண்டிய மத்திய அரசோ, இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடக்கும் பிரச்சனை போல ஒன்றுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் உடனே தலையிடுகிறது, ஆனால் மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்வதே இல்லை. இந்த பிரச்சனையை மாநிலங்களே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றால் மத்திய அரசாங்கம் எதற்கு நமக்கு?