Wednesday, January 12, 2011

வெள்ளந்தி விவசாயி கொடுத்த சாட்டையடி...

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த டிசம்பர்  23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம்.
இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார்.
 மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

Tuesday, January 11, 2011

எல்லோரும் அறிந்துகொள்ளலாமே!


அன்பானவர்களே,
நான் அறிந்ததை உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.... 

  • தமிழ்நாட்டில் குழந்தைகள் பிச்சை எடுப்பதை நீங்கள் பார்த்தால் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் "RED SOCIETY"  9940217816. அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உதவியை செய்வார்கள்.





 

  • கீழ்க்கண்ட வலைப்பின்னல் பார்க்க  :     www.friendstosupport.org

     இதன் மூலமாக உங்கள் அருகாமையில் உள்ள  இரத்த நன்கொடையாளர்(Donor), இரத்த வகை(BLOOD GROUP) , முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை நீங்கள் தெரிந்துகொள்ள மற்றும் தொடர்புக்கொள்ள முடியும். இது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்.


  • பொறியியல் மாணவர்கள்  இந்த வலைப்பின்னலில் பதிவு செய்து(register) கல்லூரிக்கு வெளியில் நேர்முகத்தேர்வில்(Off Campus) கலந்துக்கொள்ளுங்கள். http://www.campuscouncil.com/ .



  • மாற்றுதிரனாளிகளுக்கு இலவச கல்வி மற்றும் இலவச தங்கும் வசதி பற்றித்தேரிந்துக்கொள்ள! தொடர்புக்கு :- 9842062501 & 9894067506
  • தீ விபத்தால் அல்லது பிறவியிலே காது,மூக்கு வாய் பிரச்னைக்கு இலவச பிளாஸ்டிக் சிகிச்சை (PLASTIC SURGERY) கொடைக்கானலில் உள்ள பாசம்(PASAM Hospital) மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.23 மார்ச் முதல் 4 ஏப்ரல் வரை ஜேர்மன் மருத்துவர்  (by German Doctors) . Contact : 045420-240668,245732. "இறைவனை வேண்டும் உதடுகளைவிட, உதவும் கரங்களே உயர்ந்தது".   
  •  முக்கிய ஆவணங்களான பாஸ்போர்ட்(Passport),ஓட்டுனர் உரிமம்(Driving license), குடும்ப அட்டை (Ration card),வங்கி கணக்கு புத்தகம் (Bank Pass  Book) போன்றவற்றை  நீங்கள் கண்டெடுத்தால் அருகில் உள்ள தபால்பெட்டியில் போடுங்கள். தபால்துறை உரியவர் முகவரிக்கு அனுப்பி அதற்கான கட்டணத்தையும் பெறும்.  
  • அடுத்த 10 மாதங்களில் பூமி 4 டிகிரி அதிக வெப்பமடையும்.இமயமலை கரைந்துகொண்டே வருகிறது. அதனால் உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் கைகோர்த்து செயல்படவேண்டும். 
    • -மரம் நடுங்கள்.
    • -மின்சாரம் மற்றும் தண்ணீரை வீணாக்காதீர்கள்.
    • -பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்தவோ எரிக்கவோ கூடாது. 
  •  பூமியில் உள்ள மனித உயிர்களின் ஆறு மாத பிராண வாயுவுக்கான செலவு 38 ட்ரில்லியன் டாலர் ஆகும்.. "மரங்கள் இலவசமாக தருகிறது "  அவற்றை நாம் பாதுகாக்கவேண்டும்.
  • கண் வங்கி மற்றும் கண் தானத்திற்கு தொடர்புக்கொள்ள  தொலைபேசி எண் 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye  Bank)  இன்னும் கண் தானம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வலைப்பின்னலையும் அணுகலாம்:. . http://www.kannoli.com/eyebank.html  http://ruraleye.org/ 
  •  0-10 வயது குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு(Heart Surgery free of cost) ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்ட்யூட் பெங்களுரு. (Sri Valli Baba Institute Banglore. ) தொடர்பு : 9916737471 
  •  உங்கள் வீட்டு விசேசத்தில் மீதியான உணவை குப்பையில் கொட்டாமல் இவர்களுக்கு கொடுத்து உதவலாமே. தொடர்புக்கு: 1098 (only in  India ).
இந்தியாவை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற உதவுங்கள்.
  


Tuesday, January 4, 2011

இந்த ஊரில் நானும் ஒரு மைந்தன்

நான் விளையாடும்பொழுது வந்த வியர்வையையும்
நான் விழுந்தெழும்பொழுது வந்த குருதியையும்
என் அன்னை என்னை ஈன்றபொழுது வந்த உதிரத்தையும்
பார்த்த பரிவு காட்டிய  பாசம் நிறைந்த ஊர்.
என் பரம்பரை வாழ்ந்த ஊர் என்ற பாரம்பரியத்தை
எனக்கு உருவாக்கி கொடுத்த ஊர்.
மலைகள் சூழ்ந்த ஊர் ஆனாலும்
வறண்ட காலத்தில் தானும் வறண்டு போகும் குளங்கள் கொண்ட ஊர்.
ஜாதிகள் பல உள்ளடக்கிய ஊர்.
அவரவர் அடையாளங்கள் அழியாத ஊர்.




Monday, January 3, 2011

என் கிறுக்கலும் கவிதை என்றாகுமோ?

நானும் அலைந்து, திரிந்து,
மனதில் தோன்றிய வார்த்தைகளை
நடை மாற்றி தடம் மாற்றி கோர்த்தேன்....
யாரால் எப்பொழுது பாராட்ட படுமோ
நானறியேன்....
ஆனால் அப்பொழுது என் கிறுக்கலும்
கவிதை என்றாகுமோ....