Tuesday, January 4, 2011

இந்த ஊரில் நானும் ஒரு மைந்தன்

நான் விளையாடும்பொழுது வந்த வியர்வையையும்
நான் விழுந்தெழும்பொழுது வந்த குருதியையும்
என் அன்னை என்னை ஈன்றபொழுது வந்த உதிரத்தையும்
பார்த்த பரிவு காட்டிய  பாசம் நிறைந்த ஊர்.
என் பரம்பரை வாழ்ந்த ஊர் என்ற பாரம்பரியத்தை
எனக்கு உருவாக்கி கொடுத்த ஊர்.
மலைகள் சூழ்ந்த ஊர் ஆனாலும்
வறண்ட காலத்தில் தானும் வறண்டு போகும் குளங்கள் கொண்ட ஊர்.
ஜாதிகள் பல உள்ளடக்கிய ஊர்.
அவரவர் அடையாளங்கள் அழியாத ஊர்.




No comments:

Post a Comment