Thursday, April 14, 2011

திருமணம்



எனக்கென்று ஒரு வனம்


அதைசுற்றியே என் மனம்


அங்கே என்ராணியின் மணம்


இதை உறுதிபடுத்த ஒரு இனம்


அதுதான் என் திருமணம்

Wednesday, April 13, 2011

தாத்தா - பேரன்

"தன் கிளையில் தன் வண்ணத்தையும்
          வடிவத்தையும் உள்வாங்கிப் பூத்த
          பூவைப்பற்றிய செடியின் பெருமிதம்
                  அப்பா மகன் - உறவு,
 தன் காலடியில் தன் விழுதும்
          தரை தொட்டு வேர் ஊன்றுவதைப் பார்க்கும்
        அமைதியின் பெருநிலையே
                தாத்தா - பேரன் உறவு"

Sunday, April 10, 2011

அரிசி - சுஜாதா சிறுகதை

உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு வாய்த்த மெக்கானிக் துரதிர்ஷ்ட வசமாக, முன் பட்டியலைச் சார்ந்தவர்.'தேமேனு' சென்று கொண்டிருநத என் காரின் உட்பகுதியில் சில வினோத சப்தங்கள் திடீரென்று ஜனிக்க, மெக்கானிக்கிடம் அழைத்துச் சென்றேன். அவர் ஒரு முறை ஓட்டிப் பார்த்து 'ஸஸ்பென்ஷன் புடுங்கிக்கிச்சு' என்று சொன்னார்.
என்னதான் நான் இன்ஜினியாரக இருந்தாலும் என் திணை துறை எல்லாம் வேறு. மோட்டாரின் உள் அவஸ்தைகளைப் பற்றிய என் அறிவை ஒரு பஸ்டிக்கெட்டின் பின் பக்கத்தில் எழுதிவிடலாம் உதாரணமாக ஸஸ்பென்ஷன் எங்கிருக்கிறது என்று சுத்தமாகத் தெரியாது எனக்கு இருந்தும் என் அறியாமையை மெக்கானிக்கிடம் காட்டிக் கொள்ள விழையாமல்"அப்படியா? மாத்திட்டாப் போச்சு" என்றேன்

அந்த ஆள் உடனே ஒரு பழைய சாக்கை விரித்து காரின் அடியில் மறைந்தார்.அங்கிருந்து பேசினார் "கிட்டு நீங்க வாங்கிட்டு வரீங்களா! நான் வாங்கிட்டு வரவா"

"அது எங்க கிடைக்கும்?" "ஜே,ஸி, ரோடு போகணும்" சரிதான் நீங்க ஒண்ணு செய்யுங்க மொத்தமா ரிப்பேருக்கு எவ்வளவு ஆகும்னு எஸ்டிமேட் போட்டு சொல்லிடுங்க" "அதெப்படிஙக முளுக்க பார்க்காம சொல்லிட முடியாதே" "முளுக்கப் பாருங்களேன்"

அவர் பார்க்கும் நேரத்தில் நான் அந்தப் பட்டறையை விட்டு வெளியே வந்தேன்.திரும்பிப் பார்த்தால் என் கார் ஜாக்கி போடப்பட்டு பரபரவென்று முன் சக்கரங்கள் நீக்கப் பட்டு எண்ணைக் கசிவுடன் வெவ்வேறு வடிவங்களில் உதிரிப் பாகங்களை இழந்து கொண்டிருந்தது. என் வயிற்றில் கவலை கவ்விப் பிடித்தது. கழற்றிக் கழற்றி இதற்கு நுறு அதற்கு ஐம்பது என்று ஏற்றிக் கொண்டே செல்லப் போகிறார்.கார் உள்ளே சத்தம் வந்தால் என்ன குறைந்து போய்விடும் ? வெட்டி வம்பில் மாட்டிக் கொண்டேன் என்று சுயமாகச் சபித்துக்கொண்டே வெளியே வந்தேன்.

அந்தப் பட்டறை தெரு முனையில் இருந்தது.மில்கார்னர் சென்ட்ரலுடன் ஒட்டிக் கொள்ளும் இடம். காலை பத்து.போக்கு வரத்து கணிசமாக இருந்தது.எத்தனையோ கார்கள் ஆரோக்கியமான சஸ்பென்ஷனுடன் சென்று கொண்டிருந்தன.அருகே ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு என் பலிபீடத்துக்குத் திரும்புகையில் அந்த விபத்தைப் பார்ததேன்.

ஒரு கிழவன் சௌ¢ட்ரல் தியேட்டர் பக்கத்திலிருந்து சைக்கிளில் 'லொடக்கா லொடக்கா'என்று சப்தமிட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மெயின் ரோடில் காவி நிறத்தில் ஒரு 'மெட்டடார்' வேன் வந்து கொண்டிருந்தது. கிழவன் யோசிக்காமல் ,பார்க்காமல்,நிறுத்தாமல், முட்டாள்தன மாக சரேல் என்று திரும்பி வேனின் குறுக்கே சென்று விட்டான்.அதன் டிரைவருக்கு ப்ரேக் போட சந்தர்ப்பமே கிட்டவில்லை . டம் என்று சப்தம் கேட்டது அப்புறம் நான் கிழவனைப் பார்க்கவில்லை. என் வயிற்றில் பந்து சுருண்டு கொண்டது.

பரபரவென்று கூட்டம் கூடிவிட்டது. எனக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்ளும் ஆவல் பற்றிக் கொண்டது. ஆனால் அங்கே செல்லத் தயக்கமாக இருந்தது . இருந்தும் மெல்ல நெருங்கினேன். வேன் நின்றிருந்தது.கிழவன் மேல் சுத்தமாக ஏறிவிட்டது. சைக்கிள் காய்ச்சிய அப்பளம் போலக் கிடந்தது.

கிழவன் கீழே ஒருக்களித்துப் படுத்தவாறு இருந்தான்.அவன் மண்டையில் அடிபட்டு பக்கவாட்டில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது வாய் திறந்திருந்தது.உடல் ஒரு வித நடுக்கம் போல் ஆடிக் கொண்டிருந்தது அவன் உயிர் விரைவில் பிரிந்து கொண்டிருந்தது. அவனைச் சுற்றியிருந்த நாங்கள் அதாவது பங்களூர் நகரத்தின் பொறுப்புள்ள பிரஜைகள் எப்படி நடந்துகொண்டோம்? சொல்கிறேன்.

"டிரைவர் எங்கய்யா?" "அதோ உக்காந்துக்கிட்டிருக்காரு" "நான் இல்லிங்க டிரைவர்" "ஆசாமி இறந்துக்கிட்டிருக்கான் துக்குங்க" "தூக்காதிங்க! போலிஸ் வரட்டும்" "அந்த ஆட்டோவை நிறுத்துய்யா" நிறுத்தப் பட்ட ஆட்டோ கூட்ட வளையத்தை முத்தமிட்டுவிட்டு உடனே வேகம் பிடித்துப் பறந்தது அருகே கடந்த பி.டி.எஸ் பஸ்ஸின் ஜன்னல் பூரா முகங்கள்!"பிரசன்னா சீக்கிரம் வந்து பாரு!" என்று பஸ்ஸின் உள் ஒரு அழைப்புக் கேட்டது.

"போலிஸ் வரட்டும் அது வரைக்கும் ஒண்ணும் செய்யக் கூடாது" "டெலிபோன் செய்யுங்களேன்" "ஸார் நீங்கதான் போய் செய்யுங்களேன்" "எனக்கு அர்ஜண்டா வேலை இருக்கு.போலிஸ் வந்துருவாங்க" இப்போது கிழவனின் நடுக்கம் நின்றிருந்தது. வாயால் பெரிசாக மூச்சு விட்டதால் வழிந்த ரத்தத்தில் காற்றுக் கொப்புளங்கள் வெடித்தன.

"ஆள் யாருஙக" "யாருக்குத் தெரியும்" "கூட ஒருத்தரும் வரலியா" "நீங்க என்ன பண்றிங்க எதிர்த்தாப்பல ஓட்டலுக்குப் போய் போன் பண்ணிடுங்க" என்று என்னை ஒருவர் தேர்ந்தெடுத்தார். நான் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஓட்டலுக்குச் சென்றேன்.அங்கே உற்சாகமாக எல்லோரும் டிபன் பண்ணிக் கொண்டிருந்தார்கள் "டெலிபோன் செய்யணும்" "எழுபத்தஞ்சு பைசா" "தர்றேன்" "முதல்ல கொடுத்துடுங்க எஸ்.டி டி கூடாது" "இல்லை . போலிசுக்கு போன் செய்யணும். ஒரு ஆக்ஸிடெண்ட்" "பண்ணிக்கங்க" "டைரக்டரி வேணும்.அவசர போலிஸ் உதவிக்கு என்ன நம்பர் செய்யணும்?" "தெரியாது" "டைரக்டரி இல்லையா?" "இல்லை!" "அந்தாளு இறந்துகிட்டு இருக்கான்" "ஸார் நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா-" "என்ன?" "இதில மட்டும் மாட்டிக்காதிங்க" "எதில?"

"ஆக்ஸிடெண்ட் கேஸில நான் ஒரு முறை ,இந்த மாதிரி ஆகஸிடெண்ட் கேஸ்தான், வழில கிடக்கான்.கார்ல எடுத்திட்டு ஆஸபத்திரிக்குப் போனேன்.'அங்க ஏன் கொண்டு வந்தே மெடிக்கோ லீகல் கேஸ். விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போ'ன்னாங்க.விக்டோரியா எவ்வளவு துரம்?- அங்கே போனேன் ."அங்க போனா 'போலிஸ்காரங்க இல்லாம எப்படி நீ பாடிய மட்டும கொண்டு வரலாம்'னு ஒரு ஓரத்தில் ஒன்றரை மணி நேரம் காக்க வெச்சாங்க அதுக்கப்புறம் அங்க போன் பண்ணி இங்க போன் பண்ணி போலிஸ் வந்தாங்க

முதல்லயே என்மேல ஏறினாங்க'எப்படிய்யா எங்களுக்கு சொல்லாம இங்க கொண்டுட்டு வரலாம்னுட்டு என்னைத் திட்டினாங்க அவங்க ஆஸபத்திரில கேஸ் எடுத்துக்கிட்ட போது ஆள் போய்ட்டான்' டெட் ஆன் அரைவல்'னு முடிச்சுடடு கையெழுத்துப் போட்டு கிடங்குங்குக்கு அனுப்பிச்சுட்டாங்க."கேஸ் அத்தோட நின்னுச்சா? இல்லை நான்தான் ஸார் சாட்சி ஆறு மாசம் இழுத்து அடிச்சாங்க கோர்ட்டுககு .சம்மன்ஸ் வரும் அங்கே போவேன் இன்ஸபெக்டர் வந்தா கவர்மெண்ட் வக்கீல் வரமாட்டாரு ரெண்டு பேருமே வந்தா டிரைவரோட வக்கீல் ஒத்திப் போட்டுருவாரு "அன்னிக்கு ஒரு சின்ன கணக்குக்காக மொத்தம் என்ககு ஆன செலவை கணக்குப் பண்ணிப் பார்ததேன். கிட்டத் தட்ட ஆயிரம் ரூபா அதோட நின்னுச்சா கேஸ் ? என்ன ஆச்சு கேளுங்க ஏறக்குறைய அந்த விபத்துககு நானே காரணம்ஙகற மாதிரி குறுக்கு கேள்வி போட்டு கண்ல விரலை விட்டு ஆட்டிட்டான் வக்கீல். விட்டாப் போதும்னு ஆயிருச்சு எல்லாம் எதுக்காக? ஒரு குடிமகன்ங்கற முறையில் என் பொறுப்பை என் கடமையை செஞ்சதுக்கு"

"நான் பிரமிப்புடன்கேட்டுக் கொண்டிருந்துவிட்டு "யாராவது போலிசுக்கு போன் செய்ய வேண்டாமா" என்றேன்

"நீங்க தாராளமா போன் பண்ணுங்க கூப்பிட்டா கூட போய்ட்டு வாங்க .எனக்கு நடந்ததெல்லாம் சொல்லிட்டேன்" "நம்பர் தெரியலையே" "நுறு பண்ணுங்க" நான் போலிஸ¨க்கு டெலிபோன் செய்துவிட்டு திரும்ப அங்கே சென்றேன் ஏற்கெனவே இரண்டு டிராஃபிக் போலிஸ் ஆசாமிகள் நின்று சாக்கட்டியில் கோடு போட்டுக் கொண்டிருந்தாரகள் நான் சென்றதும் "இவர்தாங்க " என்றார் ஒருவர் என்னை சுட்டிக்காட்டி "போலிசுக்கு சொல்லிட்டேன்" என்றேன் "போலிஸ் வந்தாச்சு .பக்கத்தில்தானே சேஷாத்ரிபுரம் போலிஸ் ஸ்டேஷன். அங்கே போய் கூட்டி வந்துட்டார் டிரைவரு" போலிஸ் இன்ஸபெக்டர என்னைப் பார்தது "கொஞ்சம் வாங்க" என்றார் நான் தயக்கத்துடன் சென்றேன். "நீங்க இந்த ஆக்ஸிடெண்ட்டை பார்த்திங்களா?" " ம்.. பார்த்தேன்" "உங்க பேரு?" அவர் பையிலிருந்து ஒரு டயரி புறப்பட்டது.என்னுள் எச்சரிக்கை சக்திகள் உயிர் பெற்றன ."எதுக்கு?" " எதுக்கா?..விட்ன்ஸ் ஸார்! சாட்சி. நீங்க பார்க்கலை?" "அது வந்து … பார்ததேன் துரத்தில இருந்து சரியாப் பார்க்கலை" "இப்பதான் பார்ததேன்னு சொன்னிங்க? அட்ரஸ் சொல்லுங்க" "அட்ரஸ் வந்து.. நான் ஊருக்குப் புதுசுங்க" "ஊருக்குப் புதுசா? பங்களுர்ல தங்கறவர்தானே?" "அதாவது மெட்றாஸ்காரன் நான்" " சரி. இங்க வேலை செய்யறவரா?" " இல்லை.. இன்ஃபாக்ட் நான் இன்னிக்கு பிருந்தாவன்ல திரும்பிடறேன்" அவர் நான் சொன்னதை சுத்தமாக நம்பவில்லை.என்னை வருத்தத்துடன் பார்த்துச் சிரித்தார் "ஏன் ஸார் சாட்சி சொல்றதுக்கு அவ்வளவு பயமா?" "பயம்னு இல்லிங்க. வந்து நான் ஊர்லயே இல்லாம இருந்தா எப்படி சாட்சி சொல்ல முடியும் இதோ இவர் கூடப் பார்த்தார்" "அய்யோ நான் பார்க்கலை இப்பத்தான் வரேன்" "யாராவது பாத்தவங்க சாட்சி சொல்ல வரமாட்டிங்களா? யாராவது?

கூட்டம் மெல்லக் கலைந்தது நான் ஒரு சின்ன சமாதான முயற்சியாக"ப்ளீஸ் லுக் இன்ஸபெக்டர் ! தி ஃபாக்ட் இஸ் திஸ்! என்னால சாட்சிக்கு வரமுடியும் எனக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது.சந்தோஷமா வருவேன். ஆனா வெளியூர்க்காரன்.. அதனால மெட்றாஸ்ல இருந்தா எப்படி.." இன்ஸபெக்டர் கோபததுடன் "போய்யா! மெட்றாஸ் போய்யா இங்க ஏன் நிக்கறே ! போ" என்றார்.கிழவனின் அருகில் சென்றார் அவன் இது நேரத்தில் இறந்திருந்தான் நான் சற்று க்ஷநெரம் நின்றேன். மெதுவாக அருகில் இருப்பவரிடம்"மெட்றாஸ்ல இருந்து வந்து எப்படி சாட்சி சொல்ல முடியும் சொல்லுஙக" "அதானே! ஆவுறதில்லை அது" என்று அனுதாபித்தார் திரும்ப மெக்கானிக் ஷாப்பிற்கு வந்தேன் அவர் என் காரின் அக்கக்கான பாகங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார் "கிளட்சு ப்ளேட்டு கூட தேஞ்சிருக்கு மாத்திரலாமா" என்றார் "செய்யுங்க" "இன்ஜினை டவுன் பண்ணணும் மூணு நாளாகும்" "செய்யுங்க. எஸ்டிமேட் கொடுத்துடுங்க" "மொத்தம் முன்னுத்தம்பது, எல்லாத்துககும் பில் கொடுத்துர்றேன்" "சரி" "உங்க அட்ரஸ் சொல்லுங்க" சொன்னேன் "எத்தனை வருசமா அந்த ஃபாக்டரில இருக்கிங்க" "ஒம்பது வருஷமா" "புதன் கிழமை வந்துருங்க" "சரி" என்று வெளியே வந்தேன் இப்போது அந்த காவி வர்ண வேனைக் காணவில்லை. கூட்டம் விலகியிருந்தது ஒன்றிரண்டு பேர்களே இருந்தனர். போலிஸ்காரர்களையும் காணோம். நான் விபத்து நடந்த இடத்தை மறுபடி கடக்க வேண்டியிருந்தது கிழவன் கிடந்த இடத்தில் அடையாளமாக உறைந்த ரத்தத்திட்டு இருந்தது. சைக்கிள் கிடந்தது. ஏறக்குறைய கிழவனின் வயசிருக்கும் போல் புராதன சைக்கிள். அதன் ஹாண்டில் பாரில் ஒரு அழுக்குப்பை மாட்டியிருந்தது அதில் கிழவன் அரை கிலோ அரிசி வாங்கி வைத்திருந்தான் போலும். அந்த அரிசி சாலையில் சிதறியிருந்தது. பாதி அரிசி ரத்தத்தில் இருந்தது இரண்டு சிறுவர்கள் ரத்தம் படாத அரிசி மணிகளை ஆர்வத்துடன் அள்ளி டிராயர் பைக்குள் அவசரமாகத் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

Thursday, April 7, 2011

புதிர் 4 - முக்கோணங்களின் எண்ணிக்கை



பகுதி எண் வெள்ளை முக்கோணங்கள் கருப்பு முக்கோணங்கள்
1 1 3
2 3 6
3 6 10
4 ____ 15
5 15 ____
1. பகுதி நான்கு மற்றும் ஐந்தினை நிரப்புங்கள்.

2. பகுதி ஐம்பதில் எத்தனை வெள்ளை முக்கோணங்கள் இருக்கும்?

புதிர் 3 - எவ்வளவு பணம் இழப்பு?


    சைக்கிள் கடை வைத்திருக்கும் என்னுடைய நண்பர் முத்துவின் கடைக்கு ஒருநாள் ஒரு வெளிநாட்டு பயணி சைக்கிள் வாங்க வந்தார். முத்து அவரிடம் சைக்கிளை ரூபாய் 350க்கு விற்பனை செய்தார். ஆனால், முத்து அந்த சைக்கிளை வாங்கிய விலை ரூபாய் 300 . அந்த வெளிநாட்டு பயணி, அவரிடம் பணம் இல்லை எனவும், ஆனால் அவரிடம் Travelers Cheque இருப்பதாகவும் கூறி, நூறு ரூபாய் மதிப்புள்ள நான்கு செக்குகளை முத்துவிடம் கொடுத்திருக்கிறார். முத்துவுக்கு வங்கியில் கணக்கு இல்லை. அதனால் அவர் அந்த செக்குகளை அவருடைய பக்கத்து கடைக்காரரிடம் கொடுத்து, அவரிடம் இருந்து 400 ரூபாய் பணம் பெற்று, அதிலிருந்து 50 ரூபாயை அந்த பயணியிடம் கொடுத்து சைக்கிளையும் கொடுத்திருக்கிறார். முத்துவுக்கு 50 ரூபாய் லாபம் வந்ததில் மகிழ்ச்சி.

    மறுநாள் முத்துவின் பக்கத்து கடைக்காரர், தான் வங்கியில் அந்த செக்குகளை டெபொசிட் செய்ததாகவும் ஆனால் அந்த செக்குகள் திரும்பி வந்துவிட்டதாகவும் கூறி, முத்துவிடம் அந்த செக்குகளை கொடுத்துவிட்டு அவர் கொடுத்த ரூபாய் 400ம் திரும்ப வாங்கிகொண்டு போய்விட்டார். முத்து எவ்வளவு தேடியும் அந்த பயணி கிடைக்கவில்லை. இந்த குளறுபடியால் முத்துவுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு?


குறிப்பு:-

இந்த பதிவை யாரவது காப்பி பேஸ்ட் பண்ணினாலும் தயவு செய்து எனது இந்த பதிவிற்கு லிங்க் கொடுக்கவும் .

Wednesday, April 6, 2011

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?


செந்திலும் அகிலனும் நண்பர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

அகிலன் : வணக்கம் செந்தில் எப்படி இருக்கீங்க?

செந்தில் : எனக்கென்ன நான் நல்லா இருக்கேன், கல்யாணம் ஆகி மூணு குழந்தைங்க இருக்காங்க.

அகிலன் : அப்படியா நல்லது. குழந்தைங்களுக்கு என்ன வயசு ஆகுது?

செந்தில் : அவங்க மூனுபேரோட வயச பெருக்கினால் 72 வரும். அவங்க மூனுபேரோட வயச கூட்டினால் உன் பிறந்ததேதி வரும்.

அகிலன் : அப்படியா, என்னால் இன்னும் கண்டுபிடிக்கமுடியல.

செந்தில் : என்னோட பெரிய குழந்தை இப்போதான் பியானோ கத்துக்க போறான்.

அகிலன் : அப்படியா. இப்ப எனக்கு அவங்க வயசு தெரிஞ்சிடுச்சி.


குழந்தைகளின் வயது என்ன? அகிலன் எப்படி கண்டுபிடித்தார்?


அதிகாரிகளுக்கு ஒரு "ஓ' போடுவோம்!

 தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இன்னும் எவ்வித பரபரப்புமின்றி தேர்தல் களம் உள்ளது. இதற்கு எல்லாம் மூலகாரணம் தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கை தான். அரசியல் கட்சிகளின் ஆரவார பிரசாரத்தை காணோம். ஒரு சுவரொட்டியையோ, சுவர் விளம்பரத்தையோ பார்க்க முடியவில்லை. தேர்தல் நடக்கிறதா என்று சொல்லும் அளவுக்கு போய்க் கொண்டு இருக்கிறது.வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வரும்போதும், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய வரும்போது மட்டும் அந்தந்த தொகுதிகளில் பரபரப்பு காணப்படுகிறது. ஒலிப்பெருக்கி சத்தம் இல்லை. போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் கட்சிக்காரர்களின் வாகன அணிவகுப்பு எதையும் பார்க்க முடியவில்லை.இன்னும் சொல்லப்போனால், அரசியல்வாதிகளைவிட வாக்காளர்களுக்கு மதிப்பு கூடிவருவது போல் தெரிகிறது. இப்போது அரசியல் கட்சிகளின் கவலையெல்லாம், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடுவார்களா, என்பது தான். இதனால், பணம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஆனால் அதற்கும், தேர்தல் கமிஷன் "செக்' வைத்துவிட்டது. பண பட்டுவாடாவை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதை நடத்துவதற்கு ஐகோர்ட்டே அனுமதி வழங்கி உள்ளது.ஜனநாயகம் செத்துவிடவில்லை. இன்னும் நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிபட்டவர்களால், எந்த அரசியல்வாதிகளும், "சகாயம்' பெற்றுவிட முடியாது என்று நினைக்கும் அளவுக்கு உள்ளது. இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு, ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், ஒவ்வொரு வாக்காளரும், தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் கமிஷனும், நமக்காக பணியாற்றக்கூடிய அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட முடியும். அரசியல் என்பது சாக்கடை என்று ஒதுங்கிச் சென்றவர்களைக்கூட, திரும்பிப் பார்க்க வைத்துள்ள தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போடலாம்

இந்த பதிப்பை எழுதியவர் பெயரையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்
மதுமிதா மணிவண்ணன், சைதாப்பேட்டை, சென்னையிலிருந்து.

புதிர் 1 - விடை



இரண்டு இரும்பு கம்பிகளையும் படத்தில் இருப்பது போல வைத்து கோவிலை அடையலாம்.

மக்களுக்காக பாடுபட துடிக்கும் அன்பு உள்ளம்படைத்தவர்


நன்றி- ஆனந்த விகடன்.

Tuesday, April 5, 2011

வைகோவை காப்பாற்றுங்கள்!

என்னுடைய பருவ வயது காலம் முதல் பார்த்த கட்சிகளில் படித்தவர்கள்(சட்டம்) நிறைந்த கட்சி ம.தி.மு.க. ஒன்றே. இந்த ஒரு அபிப்ராயம் மட்டும்தான் இந்த கட்சி மீது எனக்கு உண்டு. ஒரு சாதாரண குடிமகனை போன்றே எனக்கும் வக்கீல்களை பிடிக்காது. DMK - ADMK கட்சிகளுடன் கூட்டணி அமைத்த பிறகு, வைகோ மீது எனக்கு எந்த வித தனிப்பட்ட பெரிய தாக்கம் என்று சொல்லும் அளவுக்கு  எதுவும் இல்லை.

நேற்று நான் படித்த செய்தி : தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் ஆதரவலை என்று
 கூறுமளவுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு எதுவும் இல்லை.

இரவில் நான்கண்ட கனவு :  நானும் வைகோவும் கட்சி அலுவகத்தில் அமர்ந்து இருக்கிறோம். வைகோ சிறிது பதட்டமாகவே தோன்றினார். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டு இருந்தார். ஒருமுடிவுக்கு வந்தவராக தொலைபேசியை எடுத்து காவல்துறைக்கு போன் செய்து "இன்னும்  சில மாதங்களுக்கு எங்கள் கட்சியில் எந்த கூட்டமும் நடக்காது ஆனாலும் எங்களுக்கு சிறிது காலம் நீங்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை வரும், அதை உங்கள் கடமையாக நீங்கள் செய்தால் அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்" என்றார்.

அண்ணா,என்ன காரணத்திற்காக இப்படி கூறினீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாமா? என்றேன். "அந்த அம்மா கோபத்தில் நிதானமாக யோசிக்க தெரியாதவள், கள்ளத்தனமும் உண்டு,தான்தான் என்ற அகங்காரமும் உண்டு.ஆனால் குரோதம் படைத்த நெஞ்சம் கொண்டவள் அல்ல. ஆனால் இந்த மனிதன் எதையும் எப்படியும் எந்த வழியிலும்  அடைய வேண்டும் என்று நினைக்ககூடிய  மனம் படைத்தவன். சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் அல்ல, தான் செய்ததுதான் சரி என்னும் தர்க்கம் செய்யக்கூடியவன். இவர்கள் ஆட்டத்தில் நான் பகடையாக பலநேரங்களில் மாட்டிக்கொண்டேன், இந்த முறை அது நடக்காமல் செய்துவிட்டேன். இருந்தாலும் இவர்களிடம்  சிறிது எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன்" என்றார். அதனால்தான் பாதுகாப்புக்காக நான் பட்டாக்கத்தியை என்பின்னால் ஒளித்துவைத்து இருந்தேன், இது அவர்க்கு தெரியாது. அவராக சுவர்பக்கமாக திரும்பி ஏதோ யோசித்து கொண்டும் சுவர்மீது உள்ள கரும்பலகையில் எழுதிக்கொண்டும் இருந்தார்.  நான் அறையின் இந்த மூலையில் வாசல்வாயில் அருகில் ஒரு செய்தித்தாளை படித்தும் பார்த்தும் கொண்டிருந்தேன்.

திடீரென்று படத்தில் வரும் வில்லன் போல மூன்று பேர் தடியாக முகத்தை மறைத்துக்கொண்டு நான் வைத்திருந்ததை விட இருமடங்கு பெரியதாக பட்டாக்கத்தியை என் முன்னே காட்டினார்கள் . நான் நா தழுத்து
எழுந்த பொழுது என் பின்னால் கத்தி கீழே சரிந்து விழுந்துவிட்டது. என்னால் அவர்களை சமாளிக்கமுடியாது அதனால் சமாளிப்பது முக்கியமல்ல சாமர்த்தியம் தான் முக்கியம் என்று எண்ணியவனாக அமைதி காத்தேன்.

அந்த நொடியில் ஒருவன் என் வாயைப்பொத்தி
வெளியில் தள்ளினான். தள்ளாடிக்கொண்டே  அண்ணே,உங்களை குத்த
 வருகிறார்கள் என்று கத்தி விட்டு ஓடினேன். ஓடிக்கொண்டே  ஜன்னல் 
வழியாக பார்த்தேன்,நான் கத்துவற்குள் அவர்கள் குத்திவிட்டார்கள், வேகமாக வெளியே  ஓடிவந்து அண்ணனை குத்திவிட்டார்கள் காப்பாற்றுங்கள் எனக்கத்தினேன், அவர்கள்என் அருகே வந்தார்கள்."இந்தா உன்னுடைய கத்தி எடுத்துகொண்டு ஓடிவிடு உன்னை விட்டு விடுகிறோம்,யாரிடமாவது சொன்னால் உன்கதி அவ்ளோதான் என்றார்கள்.

அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் விலகியதும் என் சித்திப்பையன் செய்திஆசிரியராக இருக்கிறான்.அவனுக்கு போன் செய்து "இந்தமாதிரி
நடந்து விட்டது உடனே வா" என்று அழைத்தேன். அவன் வரும்பொழுது
காவல்துறையும் வந்துவிட்டது.அவர்களிடம் நடந்ததை கூறிவிட்டு முழு
ஒத்துழைப்பும் அளிப்பதாக உறுதியளித்தேன். வைகோவை தீவிர
சிகிச்சைப்பிரிவில் சேர்த்தார்கள். 

இந்த நேரத்தில் கருணாநிதி " கூட்டணிக்கு ஆதரவு தராததால் ஒரு கோமகனை தமிழகத்தின் தன்னார்வ தொண்டனை, தள்ளி இருந்த போதும் என் தம்பியாகவே இருந்த தமயனை, தமிழகத்தின் போர்வாளை கொல்லத்துணிந்த, பதிவிரதம் தெரியாத, பத்தினியின் அர்த்தம் புரியாத, பெண்ணுருவம் கொண்ட ராஜபக்சேவுக்கா உங்கள் ஒட்டு, உங்கள் ஓட்டை ஓட்டையாக்கி விடாதீர்கள். நான் சிந்தும் இந்த கண்ணீற்கு விலையாக இல்லை என்றாலும் என் தம்பி சிந்திய ரத்தத்திற்காகவாது உங்கள் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்."

 அதே நேரத்தில் ஜெயலலிதா " வைகோ மீது நான் வைத்து இருக்கும் மரியாதை எல்லோருக்கும் தெரியும்.  அவரை குத்தி விட்டு பலியை
என்மீது போட்டு ஒட்டு சேகரிக்க பார்க்கிறார் கருநாக்கு படைத்த கருணாநிதி.
புலிகளை வைத்து என்ன கொள்ளப்பார்க்கிறான் என்று காரணம் காட்டி
கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு இன்று என் தம்பி என்று நாடகம் 
ஆடுகிறாயே வெட்கமாக இல்லையா உனக்கு. அன்று காங்கிரஸ் கட்சிக்காக 
இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தாய். இன்று உன் கட்சி
மற்றும் உன் பதவி சுகத்துக்காக ஒருதமிழ் தலைவனை குத்திவிட்டாயே" என்றார்.  

இப்பொழுதும் வைகோவை பகடையாகவே  உபயோகப்படுத்துகிறார்கள்.
 பிறகு விடியற்காலை உதயத்தில் கனவு கலைந்து நான் விழித்துக்கொண்டேன். எதுவும் உண்மை இல்லை என்பதில் எனக்கு
சந்தோசமே, இவை நடக்காமல் இருக்கவும் நடக்க இருந்தால் தடுக்கவுமே
மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

காவல்துறை நண்பர்களே உங்கள்மீது நம்பிக்கை வைத்த வைகோவை
பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது என் கனவு, மற்றவர்கள் கவனத்திற்காக.

Friday, April 1, 2011

புதிர்

ஒரு சதுர வடிவ குளம். அதன் நடுவில் ஒரு கோவில். குளத்தின் எந்த பக்கத்திலிருந்தும் அந்த கோவில் இருக்கும் தொலைவு 10 மீட்டர். (பார்க்க படம்.)



உங்களிடம் 9 மீட்டர் நீளமுள்ள இரண்டு இரும்பு பலகைகள் இருக்கின்றன. அதன் மேல் ஒருவர் நடந்து செல்ல முடியும். நீங்கள் குளத்தில் இறங்காமல் இந்த இரண்டு பலகைகளின் உதவியுடன் அந்த கோவிலை அடைய வேண்டும். எக்காரனத்தைக்கொண்டும் குளத்தினுள் இறங்கக்கூடாது. 


[Edit]
இந்த புதிருக்கான விடை இந்த பதிவில்.