Wednesday, April 6, 2011

புதிர் 2 - குழந்தைகளின் வயது என்ன?


செந்திலும் அகிலனும் நண்பர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.

அகிலன் : வணக்கம் செந்தில் எப்படி இருக்கீங்க?

செந்தில் : எனக்கென்ன நான் நல்லா இருக்கேன், கல்யாணம் ஆகி மூணு குழந்தைங்க இருக்காங்க.

அகிலன் : அப்படியா நல்லது. குழந்தைங்களுக்கு என்ன வயசு ஆகுது?

செந்தில் : அவங்க மூனுபேரோட வயச பெருக்கினால் 72 வரும். அவங்க மூனுபேரோட வயச கூட்டினால் உன் பிறந்ததேதி வரும்.

அகிலன் : அப்படியா, என்னால் இன்னும் கண்டுபிடிக்கமுடியல.

செந்தில் : என்னோட பெரிய குழந்தை இப்போதான் பியானோ கத்துக்க போறான்.

அகிலன் : அப்படியா. இப்ப எனக்கு அவங்க வயசு தெரிஞ்சிடுச்சி.


குழந்தைகளின் வயது என்ன? அகிலன் எப்படி கண்டுபிடித்தார்?


No comments:

Post a Comment