Thursday, March 17, 2011

சாமர்த்தியசாலியான பெண் !

பத்து ஆண்களும் ஒரு பெண்ணுமாக பதினோரு பேர் ஒரு விமனாத்தில் கயிற்றின் உதவியோடு வானில் தொங்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்கள். அந்த கயிற்றின் வலிமை பத்து பேருக்கு 
மேல் தாங்காது, எனவே ஒருவர் கையிற்றை விட்டு விலக வேண்டும் . 
யார் விலகுவது என்று அவர்களுக்குள் போட்டிவலுத்தது. 
இதைப்பார்த்த அந்த பெண் பெருந்தன்மையாக எல்லோருக்கும் கேட்கும்படி
"இந்த உலகத்தில் பெண்களான நாங்கள் கணவருக்கும் எங்கள்
குழந்தைகளுக்குமாக மொத்தத்தில் ஆண்களுக்காக எங்கள் வாழ்க்கையை கொடுக்கிறோம் அதுபோல இன்று ஆண்களாகிய
உங்களுக்கு விட்டு கொடுப்பதில் நான் பெண் என்பதில் பெருமைபடுகிறேன் " என்றதுதான் தாமதம் மொத்த ஆண்களும் வியந்து தன்னிலையை மறந்து  ஆஹா! ஆஹா! என்று கைத்தட்டி ஆனந்தத்தோடு  பார்த்தார்கள்  பாருங்கள்!
அந்த பெண் அதே இடத்தில் தான் இருக்கிறாள் கயிற்றோடு!
 பிறகென்ன நடந்திருக்கும்!, ஆமாம் நீங்கள் நினைத்தது சரிதான்.