Monday, February 21, 2011

இந்து மதம், "திருமணம்'

*இந்து மதம், திருமணத்தை, "சமஸ்காரம்' என, அழைக்கப்படும் மதக் கோட்பாடுகளில் ஒன்று என்கிறது.

*திருமணத்தின் உள்நோக்கம், உடலின்பத்தை அனுபவிப்பதும், குழந்தை பெறுவது மட்டுமல்ல.
ஒரு மனிதன், தன் பாவக் கறைகளை நீக்கி, அறநெறிகளின் படி வாழ, மதம் காட்டும் ஒரு பாதையே, திருமண வாழ்வு.

*இந்தியாவில், முன்பு எட்டு வகை திருமணங் கள் இருந்தன. பிரும்ம மணம் (மாப்பிள்ளை வீட்டாரிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராது, பெண்ணைக் கொடுத்தல்), அசுர மணம் (மாப்பிள்ளை வீட்டாரிடம், பெண் வீட்டார் பிரதிபலன் எதிர்பார்ப்பது), தெய்வ மணம், அர்ஷ மணம், பிரஜாபத்ய மணம், காந்தர்வ மணம், ராட்சச மணம், பைசாக மணம். பிரும்ம மணமும், அசுர மணமும் மட்டுமே வழக்கில் உள்ளன.

* சபிண்ட உறவு உள்ளோர், மணந்து கொள்ளக் கூடாது. தாய் வழியில் மூன்று தலைமுறைக்குள்ளும், தந்தை வழியில் ஐந்து தலைமுறைக்குள்ளும், வராத உறவுமுறையைக் கொண்ட ஒருத்தியை, ஒருவன் மணக்கலாம். சபிண்டம் என்றால், ஒரே பிண்டத்தை சேர்ந்தவர்கள் என பொருள். அக்கருத்தையே மிதாட்சரம் என்ற நூலும், தாயபாகம் என்ற நூலும் ஏறக்குறைய வலியுறுத்துகின்றன.

* இந்து திருமண சட்டப்படி, ஒரு ஆண் மணக்கக் கூடாத பெண்கள் யார் யார் தெரியுமா?

ஏறுவழி உறவு முறைப்பெண், ஏறுவழி உறவுக் கரரின் மனைவி அல்லது இறங்குவழி உறவினரின் மனைவி, சகோதரனின் மனைவி, தந்தையின் சகோதரரின் மனைவி, தாயின் சகோதரியின் மகள் (சில வகுப்பில் விலக்கு உண்டு) தந்தையின் சகோதரி, தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி மகள் (விலக்கு உண்டு), தந்தையின் சகோதரர் மகள், (விலக்கு உண்டு.) தவிர, இந்து திருமணம் சட்டம், ஒரு ஆணும், பெண்ணும் மணந்து கொள்ள, பல நிபந்தனைகளை விதிக்கிறது.

* திருமணம் செய்து கொள்ளும் ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடை பெறும் சமயத்தில், வேறொரு கணவனோ, மனைவியோ உயிருடன் இருக்கக் கூடாது. மணமக்கள் மனநிலை பிறழ்ந்தவராக இருத்தல் கூடாது.

 மணமகனுக்கு திருமண வயது 21, மணமகளுக்கு 18. மணமக்களுக்கு இடையே தடை செய்யப்பட்ட உறவு முறையோ, சபிண்ட உறவுமுறையோ இருத்தல் கூடாது.

இன்னும் தகவல் அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.

Tuesday, February 15, 2011

சிவனடியார்களின் நெற்றிக்கண்

சுவாமிகளே தாங்கள் காண்பது சாட்சாத்
அந்த பரமேஸ்வரனின் நாட்டியத்தையா?
இல்லை பங்கு சந்தை நிலவரத்தையா?